Thursday, November 12, 2009
இறை இல்லம் கட்ட நிதி உதவி தேவை.
பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கவும்,கட்டவும் ரூபாய் 50,0000.00 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, AL-MADRASATHUL DHEENIYATH ( Regd)NO.12,Halls Road, Kilpauk, CHENNAI-600010 என்ற இடத்தில் தொழுகை நடைபெற்று வருகிறது,ஆனால்- 25 நபர்கள் மட்டுமே தொழ இடம் உள்ளது,இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மக்கள் தொழ வேண்டும் என்றால்,அதற்கு பெரிய பள்ளியாக கட்டினால் மட்டுமே முடியும்.தாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.
மேலும் விவரங்களுக்கு,
saibudeen 91-9841045673
kilpauk muslim welfare association
தகவல்:சைபுதீன்,அதிரை.
மேலும் விவரங்களுக்கும்,படங்களுக்கும்...........
http://peacetrain1.blogspot.com/
Thursday, July 2, 2009
புதிய விடியல் பிறக்கட்டும் !
போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !
( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை )
தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.
சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.
1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும். இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.
ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது. பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !
இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்! அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?
அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.
40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.
போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27) வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே!
என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.
தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?
தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள். இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.
தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?
இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !
பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.
தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.
இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி) பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள்.
எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’(அல்குர்ஆன் 2:195) எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.
மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக் களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிரணைய கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?
திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத் தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.
ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன.
ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது?
மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா?
இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித் துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மை யடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல !
நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது. இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !
Sunday, January 18, 2009
இஸ்லாம் பார்வையில் "விதி"
மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத்)
அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி
அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி
பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதிஇதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி
மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி
Wednesday, January 14, 2009
கற்சிலைகளை வணங்குவது சைத்தானின் அருவருப்பான செயல்களே!!!
"அஸ்ஸலாமு அலைக்கும்,சலீம்"குரல் வந்த திசை நோக்கி பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்கா, கையில் உமல் பொட்டியுடன்(பன்னாவா-கொடுவாவா காக்கா)."வ அலைக்கும் சலாம் காக்கா" முகமனுக்கு பதில் சொல்லிவிட்டு முறுவலித்தார் நானா.
"என்ன சலீம்,கையில பேப்பரும் ஆளுமா,எதுனா தேர்தல் செய்தியா?ஆமா,திருமங்கலத்துல யாரு ஜெயிச்சதாம்?என்ற பஷீர் காக்காவை பார்த்து சொன்னார் சலீம் நானா,"தி மு க தான் ஜெயிச்சிருக்கு,ஆனா அதுல நெறைய தில்லுமுல்லு நடந்திருக்குன்னு அம்மா சொல்லுது,அது கெடக்குது காக்கா,பேப்பர தொறந்தா ஒரே சினிமா,சோதிடம்,ராசி பலன் இப்பிடி சீரழிவு கலாச்சாரமும்,மூட நம்பிக்கையும் தான் அதிகம்,எனக்கு ஒரு விளக்கம் தெரியனும்,அதாவது இஸ்லாம் பார்வையில சோதிடம்,ராசி பலன் போன்ற மூட நம்பிக்கைகள் பற்றி நீங்க எனக்கு விளக்கனும்"வேண்டுகோள் விட்டார் சலீம் நானா.
பஷீர் காக்கா சொன்னார்," நாள், நட்சத்திரம் பார்த்தல்(சோதிடம்), சகுனம் பார்த்தல் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இவை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானாவைகளாகும்."
"ஒருவன் முஸ்லிமாக வேண்டுமெனில் அவன் "நன்மை, தீமை யாவும் இறைவன் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும்" நம்ப வேண்டும். அவ்வாறு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் நாள், நட்சத்திரம் பார்ப்பது அந்த நம்பிக்கைக்கு மாறு செய்வதற்கு ஒப்பானதாகும். அவ்வாறு எவரேனும் செய்தால் அவர் பாவமன்னிப்பு தேடி மீள்வது கட்டாயக் கடமையாகும்."
"அடுத்த நிமிடம் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே. அப்படியிருக்க தன்னை போன்ற ஒரு படைப்பான இன்னொரு மனிதனிடம் சென்று நல்ல நேரம் நிச்சயிப்பது, எதிர் காலத்தில் தனக்கு என்ன நிகழும் என்பதை அறிய குறி கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அம்மனிதனுக்கு இறைவனுக்கு மட்டுமேயுள்ள எதிர் காலத்தை அறியும் சக்தி இருப்பதாக எண்ணுவதற்கு ஒப்பானதாகும். இதையே திருமறை குர்ஆன்,........அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் , அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன).........(அல்குர்ஆன் 5:3)
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் , அம்புகள் எறிந்து குறி கேட்பதும் , ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90) என்று இறைவனின் வார்த்தைகளாகக் குறிப்பிடுகிறது."
"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே."
"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே."இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம்" - (அல்குர்ஆன் 3:140) "சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேற்பகுதி கீழே செல்லும். இதுவே இயற்கை நியதி. இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டுச் சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்."
"எதிர் காலத்தில் இன்னின்ன நடக்கும் என்பதை இறைவன் நபி(ஸல்) அவர்கள் வாயிலாக சிலவற்றை அறிவித்துத் தந்திருக்கிறான். அவற்றைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் அறியும் ஞானம் இவ்வுலகில் யாருக்கும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத சிலவற்றை மற்றவர்களால் அறிய முடியும் என நம்பிக்கை வைப்பது அவர்களை வரும் காலத்தை அறியும் பண்பு கொண்ட இறை நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்பானதாகும். "
"இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம். ""ஒரு மந்திரவாதி(?)யிடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று சிலர் கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.""நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்? இதைச் சிந்திக்க வேண்டாமா? "
"யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி . (அஹ்மத் 9171) "
"இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்களின் நிலைமையை கவனித்தால் அவை அனைத்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் நடத்தும் ஏமாற்று வித்தை என்பதை அறிந்து கொள்ளலாம். "
"மற்றவர்களுக்கு நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கணித்துக் கூறும் இவர்களுக்கு தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள ஏன் முடியவில்லை? அவர்களைப் பொறுத்தவரை யாராவது அவர்களிடம் சென்று குறி கேட்கும் நேரம் தான் அவர்களுக்கு நல்ல நேரம். இல்லையெனில் அன்றைய சாப்பாட்டிற்கே அவர்களுக்குத் திண்டாட்டம் தான். இது ஒரு பித்தலாட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.
"பஷீர் காக்கா சொல்லி முடித்ததும்,சலீம் நானாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை,"ஸுப்ஹாநல்லாஹ்,இஸ்லாம் ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாக விவரிக்கிறது.சத்தியமாக இது ஒரு இறைவனுடைய மார்க்கம்தான்".அவருள் நிம்மதி வெளிப்பட்டது.
http://www.peacetrain1.blogspot.com/
Sunday, January 11, 2009
சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!!!
Saturday, January 3, 2009
அட!இது நம்ம ஆளு!!!
"பஷீர் காக்கா, அந்த சகோதரர் பேரு எஸ்.ஏ.மன்சூர் அலி.நம்ம நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க."பஷீர் காக்காவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை."நம்ம சமுதாயத்துல இப்படி ஒரு ஆளா?சலீமு,இவர நம்ம ஊருக்கு கூட்டி வந்து,மனித வள மேம்பாடு போன்ற கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி,மாணவர்களுக்கும்,எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பயன் கிடக்கிற மாதிரி செய்யணும்,ஆமா அவர பத்தி,எங்க விசாரிக்கிறது?ஆர்வம் பீறிட கேட்டார் பஷீர் காக்கா.
"காக்கா,நீடூர் ஆன்லைன் போயி,உனக்குள் ஒரு சுரங்கம் என்கிற தலைப்புல பாத்தா,அவரோட பேச்சுக்கள வீடியோவுல பாக்கலாம்,நம்ம பீஸ் ட்ரைன் பிளாகில போய், http://www.peacetrain1.blogspot.com/ உனக்குள் ஒரு சுரங்கம் அப்படிங்கிற தொடுப்ப கிளிக் பண்ணினா,நேரடியா அவரோட வெப் சைட் திறக்கும்,அது அவரோட சொந்த வெப் சைட்.அதுல நிறைய கட்டுரைகள,அருமையான விளக்கங்களோட பாக்கலாம்,அதுல இருக்கிற ஸ்பேஷாலிட்டி என்ன தெரியமா,அது குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில விளக்குறதுதான். அதோட அவரோட முகவரியும் குறிச்சுக்கோங்க,எல்லாருக்கும் தேவைப்படும், S.A. Mansoor Ali, 3 – 125 / A, Jinnah Street,NIDUR – 609 203,Nagappattinam Dist, Tamilnadu, INDIA".
"சலீமு,அவரு நீடூருக்கு மட்டும் உள்ள சொத்து கிடையாது,நம்ம சமுதாயத்தோட சொத்து.ஒட்டு மொத்த முஸ்லிம்களோட சொத்து,அவரு மூலமா நம்ம மாணவர்கள் பயன் பெறனும். "பஷீர் காக்கா உறுதியாய் சொன்னார்".
Sunday, December 7, 2008
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம்.
Tuesday, October 21, 2008
குஜராத், ஒரிசா, கர்நாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!



"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது''
என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள்.
"கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்'
என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது.
சங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெடிப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.
பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் "இந்துத்துவ பொது உளவியல்'தான் அனைத்தையும் இயக்குகின்றது.
இன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர்.
92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர்.
மும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.
ஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் "பதிலடி' கொடுக்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.
சமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அதாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும்.
இந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள்.
இந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன.
மாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள்.
Saturday, October 18, 2008
இந்து வேதங்களில் இஸ்லாம்
பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் பூரணமாக:
”ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாதசிஷ்ய சாகா ஸமன்விதநிருபஸ்சேவ மஹாதேவமருஸ்தல நிவாஸினம்” (பவிஷ்ய புராணம் 3,3,5-8)
இதன் பொருள்:“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்). அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார்.”மேலும் அதே புராணத்தில் அந்த ஆசாரியாரின் இனம், தோற்றம்,பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் கூறப்பட்டுள்ளது. ”அவர்கள் ‘கத்னா (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (அதான்) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்” என்று அது கூறுகிறது (பவிஷ்ய புராணம், 3:25:3) மேலும் காண்க, அதர்ணவேதம் 20வது காணம், ரிக்வேதம், மந்திரம்:5, சூக்தம்:28இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள், திருக்குர்ஆனில்:2:127. இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது ”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).2:128. ”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”2:129. ”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும் பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (என்றும் பிரார்த்தித்தார்கள்)
இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை, மார்க்கம், சமுதாயம் ஆகியவை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்படடிருந்தது.இறைத்தூதர் மோசே (மூஸா (அலை) அவர்களின் முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டில்:”உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார், அவருக்கு செவிகொடுப்பீர்களாக! (உபாகமம்,18:15)”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபாகமம், 18:18)புதிய ஏற்பாட்டில்:மோசே (மூஸா (அலை) பிதாக்களை நோக்கி, உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார், அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்காளக. (அப்போஸ்தலர்,3:22)நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய புதல்வர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்களே இஸ்ரவேலர்கள். அவர்களுடைய சகோதரர் இஸ்மாயீல் (அலை) அவர்களது பரம்பரையில் வந்தவரே இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (இப்னு கஸீர் அடிக் குறிப்பு)இந்து நண்பர்களே,நீங்கள் பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம் இஸ்லாம்தான்,நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரே தலைவர் நபிகள் நாயகம் மட்டுமே.சிந்தியுங்கள்.அல்லாஹ் நேர்வழி தர போதுமானவன்.இதே போல் பழைய,புதிய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் குறித்து முன் அறிவிப்பு உள்ளதை கிறிஸ்தவ நண்பர்கள் http://egathuvam.blogspot.com என்ற தளத்தில் காணலாம்.
Friday, October 17, 2008
தீண்டாமைக் கொடுமை .............!
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கம்பூர் பகுதியை இணைக்க பேரளம் - அன்னியூர் சாலையில் ரூ.69 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. அந்தந்த ஊர் பகுதியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திரும்பாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ரவி, ராமு, பாண்டியன், கலியபெருமாள் ஆகியோர் முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்துள்ளனர்.
கம்பூர் முஸ்லிம்கள் வாழும் பகுதி யாக உள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் நம் கிராமத்தை ஆக்கிரமித் தால் நமது கிராமமும் முஸ்லிம் கிராமமாக மாறிவிடும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை செல்வராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு கிராமத்தைச் சுற்றிலும் பரப்பி, அதன்மூலம் குளிர்காய திட்டமிட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கம்பூர் என்று பெயரிடப்பட்ட மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையை செல்வராஜ் தலைமையிலான கும்பல் கடப்பாரை, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு நாசப்படுத்தியுள்ளது. பிறகு ``இதனை எந்த துலுக்கன் கேட்டாலும் வெட்டு’’ என்று கூறி அந்த அறிவிப்புப் பலகையை அங்கிருந்து அகற்றி ஊருக்குள் எடுத்துச் சென்றது.
பொறுமை காத்த முஸ்லிம் இளைஞர் களும் ஜமாஅத்தார்களும், கம்பூர் பெயர்ப் பலகை வைப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பெயர்ப் பலகையை வைத்தனர். ஆனால் இரவோடு இரவாக அதுவும் பிடுங்கப் பட்டுள்ளது.
இதையடுத்து ஜமாஅத் தலைவர் சகாபுதீன், சம்பந்தப்பட்டவர்களிடம் ``ஏன் இப்படி செய்கிறீர்கள்?’’ என கேட்க, “வாயை மூடிக்கொண்டு போய்விடு. இல்லையென்றால் உன்னையும் உங்க ளது ஊரையும் தொலைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர். இச்செய்தியை அறிந்த ஜமாஅத்தார்களும், இளைஞர் கள் வெகுண்டெழுந்தனர். ஆனால் ஜமாஅத் பெரியவர்களின் ஆலோச னைக்கு இணங்க, அருகில் உள்ள சுரைக்காயூர், மாளிகை நத்தம், துலார், கருப்பூர், திருபாம்பூர் ஆகிய கிராமங் களைக் கூட்டி பேச்சுவார்த்தை நடை பெற்றது.
திருபாம்புரத்தைச் சேர்ந்த நாட்டாண்மை என்று அழைக்கப்படும் கிரா மத் தலைவர் கலியபெருமாள், கம்பூர் என்ற ஊரே இல்லாத நிலையில் பேச்சு வார்த்தை எதற்கு? என்று கூறி எழுந்து சென்றுவிட்டார். ஐந்து கிராம பஞ்சாயத் திற்கும் அவர் கட்டுப்படாததால் ஜமாஅத் சார்பில் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கம்போல் காவல்துறை புகாரை கிடப்பில் போட்டது. இதையடுத்து நன்னிலம் டி.எஸ்.பி. நாராயணசாமியிடம் புகார் அளித்துள்ள னர். இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருபாம்புரம் பகுதி மக்களுக்கு ஆதர வாகப் பேசி அனுப்பி வைத்துள்ளார்.
பொது விநியோகக் கடை, முஸ்லிம் களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் திருபாம்புரம் பகுதியில் தான் அமைந்துள்ளது. ஆனால் திருபாம்புரத் தைச் சேர்ந்த செல்வராஜ் தலைமையில் கடந்த 5.9.08 அன்று முதல் முஸ்லிம் களுக்கு டீ கொடுக்கக்கூடாது, பொது விநியோக கடையில் பொருட்களை வழங்கக்கூடாது, விவசாய வேலை செய்ய கூலி ஆட்கள் செல்லக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதனால், முஸ்லிம்கள் திருப்பாம்புரத் தில் டீ குடிக்கச் சென்றால் டீ தர மறுத் துள்ளனர். டிராக்டர் உழுவதற்கு எடுத் துச் சென்றால் இரும்பு பைப்கள், உருட் டுக் கட்டைகளை சாலையில் போட்டு தடுத்துள்ளனர். வயல் வேலைகளுக்கு கூலி ஆட்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் கம்பூர் பகுதி முஸ்லிம்களிடம் பேசினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இச்செயல் இந்திய இறையாண்மை சட்டத்தின்படி தங்களது வாழ்வாதார சூழல் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கம்பூர் முஸ்லிம்கள் மனம் வெதும்புகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையிடம் திருபாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ராமு, ரவி, கலியபெருமாள், பாண்டியன் ஆகியோர் மீது கம்பூர் முஸ்லிம்கள் புகார் அளித்தனர். மேலும் தாசில்தாரிடமும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் தலைமையில் இருதரப் பினரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாட்டிற்குப் பின்பும் அதே நிலை நீடித்தது. மாநிலத் துணைச் செயலாளர் பேரா.ஹாஜாகனி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரை தொலைப்பேசி யில் தொடர்புகொண்டு கம்பூர் தீர்வு காண வலியுத்தினர். திருவாரூர் ஆர்.டி.ஓ. தலைமையில் கடந்த 22.09.08 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது சமூக பகிஷ்கரிப்பு நடவடிக் கையைக் கைவிடுவது என்றும், விவசாய கூலி வேலைக்கு செல்வதை தடுத் தாலோ அல்லது கடைகளில் பொருட்கள் வழங் கப்படவில்லை என்று தெரிந் தாலோ சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காணாமல் போன கம்பூர் ஊர் பெயர்ப் பலகை சம்பந்தமாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக் கப்படும், இருதரப்பினரும் என்றும் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு செய்தனர்.
ஆனால் இந்த நிலையிலும், எழுதப் படாத தீர்ப்பாக திருபாம்புரம் பகுதி மக்கள் கம்பூர் முஸ்லிம்கள் மீது தீண்டா மையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.கம்பூரை உள்ளடக்கிய குத்தாலம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் முஸ்லிம் ஜமாஅத் பெரியவர்கள் முறையிட சென்றபோது, என்னிடம் ஏன் வருகிறீர்கள், தமுமுக காரனிடம் போங்கள் என்று தெரிந்து எடுத்தெரிந்து பேசியுள்ளார். ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார் இவர்.தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் ஜீவாதார உரிமை களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என மௌனமாக காத்துக் கொண்டிருக் கின்றனர் கம்பூர் முஸ்லிம்கள்.
Wednesday, October 15, 2008
இந்தியாவில் பட்டினி நிலைமை மிகவும் மோசம்
வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அட்டவணையில், 88 நாடுகள் பட்டியலில் இந்தியா 66-வது இடத்திலும், இலங்கை 39-வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 1990-ம் ஆண்டு சுமார் 32 புள்ளிகளாக இருந்த பட்டினி விகிதம் தற்போது சுமார் 23 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. காங்கோ 42க்கும் மேற்பட்ட புள்ளிகளுடன், பட்டினியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள நாடுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இருபது முதல் 30 புள்ளிகள் வரை பெற்றுள்ள நாடுகளில், பட்டினி நிலவரம் அபாயகரமாக இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. அதன்படி, இந்தியா உள்பட 33 நாடுகள் அந்தப் பட்டியலில் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, 15 புள்ளிகள் மற்றுமே பெற்றிருப்பதால், அபாயகரமான நிலைமை உள்ள நாடுகள் வரிசையில் இடம் பெறவில்லை.
பட்டினி பெரும்பாலும் வறுமையுடன் தொடர்புடையதாக உள்ளதாகவும், பட்டினியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் அதிகமானவர்கள் குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் உள்ளவர்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மத்தியப் பிரதேசம். அதையடுத்து, ஜார்க்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்கள் உள்ளன. பஞ்சாப் மற்றும் கேரள மாநிலங்களில் மிகக்குறைந்த பாதிப்பே உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
கலோரி பற்றாக்குறை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்துடன், எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் பட்டினி அட்டவணையில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளம் போன்ற சில மாநிலங்களில், கலோரி பற்றாக்குறையும், எடை குறைவான குழந்தைகளும் ஏறத்தாழ ஒரே அளவில் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
Saturday, October 11, 2008
Sunday, September 21, 2008
பார்ப்பனரை வெறுப்பது ஏன்?குத்தூசி குருசாமி
Saturday, September 13, 2008
தமிழ் எழுத்துச் சீரமைப்பு!
நாம் வாழ்வது கல்வியுகம்; நமது சமுதாயத்தை இன்று கல்வி அறிவுச் சமுதாயம் (Knowledge Society) என்று எல்லோரும் குறிப்பிடுகின்றனர். இன்றைய உலகில் சமுதாய வாழ்வில் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கக் கீழ்காணும் இரண்டு சான்றுகள் போதும்:
- 1960 முதல் 1975 வரையிலான காலப் பகுதியில், உலகின் மொத்தப் பொருள் உற்பத்தி (GNP) இரட்டித்தது. இதன் பயன் எல்லா நாடுகட்கும் சமமாகச் செல்லவில்லை. ஏறத்தாழ 90 விழுக்காடு போல, எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இருந்த நாடுகட்குத்-தான் இந்த வளர்ச்சியின் பெரும் பகுதி சென்றது.
1965-இல் ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கும், மொத்தப் பொருள் உற்பத்திக்கும் (GNP) இருக்கும் தொடர்புபற்றி, வளம் மிக்க 34 நாடு-களை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யப்-பட்டது. இந்த ஆய்வுக்கு 1850 முதல் 1960 வரையிலான 110 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. விதி விலக்கின்றி மேலே குறிப்பிட்ட நாடுகள் ஒவ்வொன்றிலும் எல்லோரும் ஆரம்பக் கல்வி பெற்ற நிலையை அடையுமுன் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரணையர் கல்லா தவர் (406)
என்பது வள்ளுவம். அதாவது விளைச்சல் எதுவும் தராத பொட்டல் வெளியில் போன்றவர் கல்லாதவர். அவர் இருந்தும் பயனில்லை என்று 2000 ஆண்டுகட்கு முன்பே வள்ளுவர் எழுதி வைத்தார். அவர் காலத்-தைவிட அது இன்று முற்றும் பொருந்தும். கல்விக்கு அடிப்படையானது மொழி. கல்வி உலகின் கருவூலம் முழுவதும் மொழியில் தான் இருக்கிறது. மொழியைக் கற்பதற்கு, ஒரு மொழியை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முதல் படியாக தேவைப்படுவது அம்-மொழியின் எழுத்துகளைக் கற்பதாகும்.
-பண்டைக் காலத்தில் நூற்றுக்கு இரண்-டொருவரே கல்வி கற்றனர். ஒரு சமுதாயத்தில் மிகச் சிலர் மட்டுமே எழுத்துகளைக் கற்பதற்கு அதிக நேரம் செலவிடுவது மொத்தத்தில் பெரிய சமுதாய இழப்பன்று.
இன்றைய உலகில் அனைவருக்கும் கல்வி என்பது தலையாய குறிக்கோள். தலைமுறை, தலைமுறையாகக் குழந்தைகள் அனைவரும் எழுத்துகளைக் கற்பதற்கு நீண்ட காலம் செலவழிப்பது முடிந்தால் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
-பண்டைக் காலத்தில் கல்வி என்பதே மொழிக் கல்வியாகத்தான் இருந்தது. ஆனால் இன்று பல அறிவு துறைகளைக் கற்பதற்கு மொழி ஒரு கருவி. நாம் மொழியை கற்பதற்கு மட்டும் அதிக நேரத்தை நமது முன்னோர்கள் போன்று செலவிட முடியாது.
-கல்வித் திட்டத்தில் மொழியைக் கற்பதை எளிதாக்குவது நமது முன்னேற்றப் பயணத்தின் முதல் தேவையாகும். அதற்கு எழுத்துகளைக் கற்பது எளிதாக்கப்பட வேண்டும். எளிதாக்கு-வது-தான் நாம் கூறும் சீர்திருத்ததின் நோக்கம்.
ஒரு விளக்கம்
தமிழ் எழுத்துச் சீரமைப்பை முன் வைக்கும் முன் இரண்டு தகவல்களை அறிவிப்பது முக்கியம்.
1. எழுத்துச் சீரமைப்பு என்பது தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 ஒலி எழுத்துகளில் ஒரு எழுத்தைக் கூடக் குறைப்பது அல்ல.
2. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளை எழுதுவதற்கு இப்பொழுது குழந்தைகள் 107 குறியீடுகளைக் கற்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 39 ஆக, அதாவது ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்காகக் குறைத்து, குழந்தைகளின் சுமையைக் கணிசமாகக் குறைப்பதுதான் நமது நோக்கம்.
தமிழ்ச் சாதி ஒரு குவலயக் குடும்பம்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுகம்
என்பது தொல்காப்பியம். அந்த நிலைமை மாறி வடக்கிலும், மேற்கிலும் தமிழக எல்லைகள் சுருங்கினாலும்,
இந்தியத் துணைக் கண்டத்தின்
எல்லைகள் கடந்து, பூமிப்
பந்திடை அமைந்த நாடு
பலவினும் பரவி வாழும்
ஒரு குவலயக் குடும்பமாகத் தமிழர் சாதி, 60-க்கு மேற்பட்ட நாடுகளில் வாழ்கிறது. தமிழர்கள் உலகு தழுவி வாழும் மொழிக் குடும்பம் என்பது நமது வலிமை. தமிழ் உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் மொழி என்பது அதன் பெருமை.
உலகமயமாகி வரும் இந்த யுகத்தில் ஒவ்வொரு இனமும் தனது அடையாளத்தைக் காத்து கொள்ள வேண்டும். தமிழர்கள் ஒரு மொழியினர்: பல நாட்டினர். இந்தியா உட்பட எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர். தன்னைக் காத்து கொள்வதற்கு ஆயுதம் இல்லாத சிறுபான்மையினம் காலப் போக்கில் அழிந்துவிடும்.
தமிழர்கட்கு நாடு அடையாளம் அன்று: மதம் அடையாளம் அன்று: அரசியல் கட்சி எதுவும் அடையாளம் அன்று: மொழி ஒன்று தான் அடையாளம்.
தமிழர்கள் தங்கள் மொழியைக் காப்பாற்ற வேண்டும், அதாவது தமிழர்கள் எங்கிருந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் தமிழ் கற்க வேண்டும்.
தமிழகம், இலங்கை, சிங்கப்பூர் தவிர்த்த அயலகத் தமிழர்கட்குத் தமிழ் ஒரு அரசியல் தேவையன்று, பொருளாதாரத் தேவையன்று. வாழும் நாடு எதுவாயினும் இன்று பரவலாக இடம் பெற்றுள்ள ஆங்கில மொழியின் 26 எழுத்துகட்கு அறிமுகமாகிவிட்ட தமிழ்க் குழந்தைகள், தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்தைப் பார்த்து மலைத்து நிற்கிறார்கள். அந்த மலைப்பை நீக்குவது, அவர்கள் தமிழ் கற்க நாம் தவறாது செய்ய வேண்டிய உதவி. தமிழ் மொழிப் பாதுகாப்புக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. அவர்கள் 39 குறியீடுகளைக் கற்றால் போதும். அது அவர்களை அச்சுறுத்தாது. இனி எழுத்துச் சீரமைப்புக்கு வருவோம்.
தமிழ் நெடுங்கணக்கு
தமிழில் உள்ள ஒலி எழுத்துக்களை இருபெரும் பிரிவுகளாகப் பார்க்கலாம். ஒன்று முதன்மை எழுத்துகள்: அதாவது உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், ஆயுதம் இரண்டாவது, சார்பு எழுத்துகள்: அதாவது உயிர் மெய் எழுத்துகள், அவை பின்வருமாறு:
முதன்மை எழுத்துகள்
அ. உயிர் எழுத்துகள் - 12
ஆ. மெய் எழுத்துகள் - 18
இ. ஆயுத எழுத்து 1 = 31
சார்பு எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள் 216
மொத்தம், ஒலி எழுத்துகள் ... 247
அகர முதல னகர இறுவாய்
எழுத்தெனப் படுவ முப்பஃது என்ப
என்று தான் தொல்காப்பியரும் கூறினார். தமிழ் வரிவடிவத்தை அதிக படுத்துவதே உயிர் மெய் எழுத்துகள் தான்.
அய்ரோப்பிய மொழிகளிலும், மத்திய ஆசிய மொழிகளிலும், உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டும் உள்ளன. இந்திய மொழிகளில் தான் உயிர் மெய் எழுத்துகள் என்ற தனி வரிவடிவங்களை கொண்ட மூன்றாவது பிரிவும் இருக்கிறது.
சார்பு எழுத்துகளாகிய உயிர் மெய் எழுத்துகளை எழுதுவதை எளிதாக்குவது தான் நாம் கூறும் எழுத்துச் சீரமைப்பின் நோக்கம். இந்த விளக்கத்துடன் தமிழ் நெடுங்கணக்கிற்கு வருவோம்.
முன்பக்க படத்தில் தமிழ் நெடுங்கணக்கும் அதை எழுவதற்குத் தேவைப்படும் குறியீடு களின் எண்ணிக்கையும் கொடுக்கப் பட்டுள்ளன.
இடது புறத்தில் முதல் செங்குத்து வரிசையில் க முதல் ன வரை 18 எழுத்து-களைக் கற்க வேண்டும்.
இரண்டாவது செங்குத்து வரிசையில் 18 எழுத்துகட்கு ஒரு உயிர்க் குறியீட்டை () மட்டும் கற்றால் போதுமானது.
வலது புறத்தில் எகர வரிசையில் கெ என்பதில் தொடங்கி மெய்யெழுத்து க் வரையிலான 7 செங்குத்து வரிசைகளில் உள்ள 126 எழுத்துகளைக் கற்பதற்குத் தேவைப்படுவன ஒற்றைக் கொம்பு (), இரட்டைக் கொம்பு (), சங்கிலிக் கொம்பு (), புள்ளி (.) ஆகிய நான்கு உயிர்க் குறியீடுகள் மட்டும் தான்.
ஆனால் மத்தியில் உயிர்மெய் இ - கரம், ஈ - காரம், உயிர்மெய் உ - கரம், ஊ - காரம் ஆகிய நான்கு செங்குத்து வரிசைகட்கு மட்டும், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தனி வடிவமாக 72 எழுத்துகட்கு 72 வரிவடிவங்கள் தேவைப்-படுகின்றன. இந்த 72 எழுத்துகளுக்கான தனி வரிவடிவங்களைக் குறைத்து அவற்றைக் கற்பதை எளிதாக்குவதுதான் இந்தச் சீரமைப்பின் நோக்கம்./டாக்டர் வா.செ.குழந்தைசாமி
சிறுகதை:மனித மந்தை _ அறிஞர் அண்ணா
அதோ, கண்களில் செந்தீ கொழுந்து விட்டெரிய ஓடி வருகிறாள், ஒரு பெண் - ஆம், அவள்தான் மந்தைவெளி மாரி-யம்மன்!
மாரியம்மன், ஊரிலே கொள்ளை நோய் கொடுப்பவள்- கொடுமை புரிபவளுக்குக்கூட கோயில், அவளுக்கும் தெய்வப்-பட்டம், படையல், பூசை, விழா எல்லாம் உண்டு - பக்தியே, பயந்-தாங் குள்ளிகளின் மூளையி-லேதானே உற்பத்தி!
ஒரு மூளியான கோயில், அதற்கு முன்னால் மூர்க்க புத்தி படைத்த ஒரு கூட்டம் - அவர்களுக்கிடையே இரண்டு ஆடுகள், குளுப்பாட்டி, மஞ்சள் பூசி, மாலையிட்டு நிறுத்தியிருந்தார்கள்.
ஓடிவந்தாள் மந்தைவெளி அம்மன் உரக்கக் கூவினாள்.
வெட்டாதீர்கள் ஆடுகளை வெட்டினால், வைசூரி போட்டு ஊரையே அழித்துவிடுவேன் நீங்களாடா, என் பக்தர்கள் - நீங்கள் மகா பாதகர்கள்! என் பெயரே மந்தைவெளி அம்மன் இந்த மந்தைகளைக் காப்பது என் கடமை. நீங்களே, இரண்டு ஆடுகளைக் கொண்டு வந்து எனக்கு வெட்ட வந்து விட்டீர்களே, துட்டர்களே! எனக்குப் படைக்க நீங்கள் யார்? என் பசி போக்கிக் கொள்ள எனக்குச் சக்தியில்லையா? ஆடு வேண்டுமானால், எனக்கு எடுத்துக் கொள்ளத் தெரியாதா?
தாயே, இப்படிப் பேசலாமா? கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே, இந்தத் தறுதலை அப்படித்தான் சொன்னான் - அவனையே வெட்டி விடுவோம் என்று மிரட்டினோம் - அடங்கிவிட்டான், அறிவு கெட்டவன்.
அவனுக்கு அறிவு கெடவில்லை. உங்கள் புத்திதான் சரியில்லை. என்னைத் தெய்வம் என்று நம்புவது உண்மையானால், சகல சக்திகளும் உண்டெனக்கு என்று ஒப்புக் கொள்வது உண்மையானால் எனக்கு நான் படைத்த உயிரையே பலியிடத் துணிவீர்களா?
மாதா, அதுதானே வழக்கம்!
வழக்கம் என்று சொல்லி எங்கள் கடவுள் குலத்தையே இன்று காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்! கணக்கற்ற கடவுள்களைச் சொல்லி, ஆளுக்கு குடும்பம் ஏற்படுத்தி கோயில்கள் பல கட்டி, திருவிழா, படையல், வாண-வேடிக்கை செய்து, எல்லாம் வெறும் பொம்மை விளையாட்டு என்று காட்டிவிட்டீர்கள்.
மந்தைவெளி அம்மன், காவு கொடுக்கவந்த ஆடுகளை விரட்டி விட்டாள். அந்த ஆடுகள் ஓடுமுன் அங்குக் கூடியிருந்த மனித மந்தை சிதறியோடிவிட்டது.
அம்மன் அருளைப் பெற தெய்வப்படைப்பில் ஓர் உயிரைப் பலியிடுவது என்ன நியாயம்? கருணையில்லாதது ஒரு புறமிருக்கட்டும்; கருத்தில்லையே! உணவுப் பொருளாக உட்கொள்கிறார்கள் அர்த்தமிருக்கிறது. ஆடு வெட்டுவதும், கோழி அறுப்பதும் எவ்வுளவு பைத்தியக்காரத்தனம்!
மனித அறிவு வளராத காலத்தில் மனிதன், முழுமனிதன் ஆகாத நேரத்தில், காட்டுமிராண்டி காலத்தில் வெட்டினான் - வீழ்த்தினான் இரத்தத் துளி-களைத் தெளித்து தனது முரட்டுப் பக்தியை தீர்த்துக் கொண்டான்.
இந்தக் காலத்திலும் அது ஆகுமா? ஆடு கேட்கிற சாமியும் ஒரு சாமியா? அது கசாப்புக்கடைக்குப் போகட்டுமே என்று இப்படித்தான் கூறி அவன் தடுத்தான் அவனை ஆதரித்தோர் மிகச் சிலர்! வைரங்கள் அதிகமில்லாததால் அதன் மதிப்பு குறைந்தா விடுகிறது - மணல் நிறைந்துதானிருக்கிறது - யார் சட்டை செய்கிறார்கள்.
அந்த மனித மந்தை அவனை எப்படி பயமுறுத்திவிட்டது!
இந்தப் பூலோகத்திலிருப்-பதைவிட, நாமெல்லாம் கூண்-டோடு நம்ம லோகம் போய்விட வேண்டியது-தானே! இந்தியாவில் மட்டுந்-தான், நம்மவர் இன்னமும் இருக்கிறார்கள் - வெளியுலகில் எவ்வளவோ கடவுள் குடும்பங்கள், ஊரை-விட்டே ஓடிவிட்டன - சில நாடு கடத்தப்பட்டன அவைகளெல்லாம் மாஜிகளாகிவிட்டன.
தார், ஒடின் போன்ற தெய்வங்கள் எங்கு போய் மறைந்தன என்றே தெரியவில்லை. ஆனால், இங்கு மட்டும் மாரி, காளி, திரிசூலி, முத்தாலு ராவுத்தன், முனியன், சங்கிலிக்கருப்பன் வரையில் ஒருவர்கூட விடாமல் வாழ்-கிறார்கள்.
என்னைப் பொறுத்த-மட்டில் நான் மனித உலகை-விட்டே போய்விடுவதென்று முடிவிற்கே வந்து விட்டேன்.
எனக்குக் கொடுத்த வேலை, ஊரை நோயால் வாட்டல் - இதைச் செய்யும் என்னையும் இந்த மக்கள் விட்டு வைத்திருக்-கிறார்-கள்! ஆனால், அதிக நாள் நீடிக்க முடியாது.
அம்மை பரவுகிறது என்றாலே, ஊசி போட வந்து விடுகிறார்கள் இப்பொழுது - என் சக்திக்கு எங்கே மதிப்பு! என் பக்திமான்-களுக்கு, புத்திதான் இல்லை என்றால் தைரியமும் இல்லை. என்னை நம்புவது போல, அவர்களை எதிர்க்கிறார்களா என்றால் இல்லை. ஓடி ஒளிந்து விடுகிறார்கள். நான் என்ன செய்யட்டும்? நான் போய்விடுகிறேன், எங்கள் லோகத்திற்கு!
எனக்கு ஆடு வெட்டுகிறான்-களாம் என்ன கோரம்! இதைத் தடுத்தவர்க-ளெல்லாம் எனக்கு விரோதி-களாம் என்ன மதியீனம்! இப்-பொழுதே, இந்தத் கோயில் கர்த்தா, கோணங்கிப் பிள்ளையைக் கேட்கிறேன்.
படுத்திருந்த பூசாரி, போகலிங்கம் திடுக்-கிட்டு எழுந்தான். ஏதோ, கோயிலுக்குள்ளே முணுமுணுப்பு சத்தம் கேட்கிறதே என்று! மந்தைவெளி அம்மன், தனக்குத்தானே பேசியபடி வெளியில் கிளம்புவதைக் கண்டு திடுக்கிட்டான்.
தாயே
தடுத்தால், ஆபத்து - விலகடா, வீணா. . .
எங்கே, அம்மையே. . .
ஊர்ப்பயணம் சொல்லிக் கொள்ள. . . கோணங்கிப் பிள்ளையிடம். . மந்தை வெளியம்மன் நடந்து விட்டாள். பூசாரி கால் விடவிடென நடுங்க, அவள் போன திசையிலே அடியெடுத்து வைக்க முயற்சி செய்ய, முடியவில்லை. ஆகவே, அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
அடே, பரமபாதகா, படுபாவி - நீ என் பக்தனா சீறினாள் அம்மன்.
ஆடு வெட்டுவது தவறு என்று நான் சொன்னேன் என்றாள் தேவி.
அந்தப் பயல்களோடு நீங்க சொல்லியும் நாலு ஆடுகளாக வெட்டிவிட்டேன்.
கொலைகாரா!
காவு கொடுத்தேன் - கொலை செய்யலீங்களே.
அது மட்டுமா? பொய் சொல்லியிருக்கிறாய் - இல்லை, அதற்குமேலே, எனக்கு சக்தியில்லை-யென்று ஊராருக்குச் சொல்லிவிட்டாய்!
என் கோயிலிலிருந்து என் சிலையைப் பண்ணையாளை விட்டுத் தூக்கிக்கொண்டு போனாய்!
அட, அதுவா? அந்தக் காலிப்பயல்களைப் போலீசிலே சிக்கவைக்க
என்னை ஒரு பொம்மையென்று நினைத்-துக்கொண்டு பொய் சொன்னாய்!
இல். . . லீ. . . எனக்குச் சக்தியிருக்கிறதென்றால் என்னிட-மல்லவா சொல்லியிருப்பாய் - போலீசுக்குப்-போய், பொய் வழக்கு கொடுத்திருக்க-மாட்டாயே!
அப்படியில்லை தாயே அக்கிரமக்கார பசங்-களைத் தண்டிக்க வேண்டாமா?
தண்டிக்க நீ யார்? அம்மன் நானிருக்க, மனிதன் நீ எப்படி முயற்சி செய்தாய்? அதுவும் அவன் தப்பு செய்யவில்லையே, நல்லதைத்தான் சொன்னான்.
உங்களுக்கு பலிகொடுக்கக் கூடாதென்று...
எனக்கு பழிவரக்கூடாது என்ற நல்லெண்ணத்-தில் சொன்னான் - தடுத்தான்!
கோணங்கிப் பிள்ளை தலை சுழல ஆரம்-பித்துவிட்டது. அவருக்கு எதுவும் புரிய-வில்லை.
கோணங்கி, உன் போன்ற கோணங்கி பக்தர்களல் எங்கள் மானம் காற்றிலே பறக்க விடப்படுகிறது - இனி நாங்கள் இங்கு இருக்க முடியாத அளவு நிலைமை வந்துவிட்டது. எல்லாம் பக்தர்கள் என்ற பெயரால் உலவும் உங்கள் செயல்களால் அவர்களால் அல்ல! ஆகவே நான் போகிறேன். இனி மந்தைவெளி இருக்கும் - அங்கு உங்கள் மனித மந்தைதான் கூடிக்கும்மாளம் போடவேண்டும். அம்மன் இருக்கமாட்டாள் என்று கூறிவிட்டது போய்-விட்டாள்!. . . கோணங்கிப் பிள்ளை கண் விழித்துப் பார்த்தார். இத்தனைக் காட்சிகளும் கனவில் கண்டவை என்று அப்பொழுதுதான் புரிந் கொண்டார்.
எதிரில், எவருக்கும் தெரியாமல், எடுத்து வந்த அம்மன் சிலை இருந்தது - அது அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது.
அந்த ஊரிலே பரவி வந்த பகுத்தறிவுப் பிரச்-சாரத்தைக் தடுக்க அவரிட்ட சதித் திட்டம் - பகுத்தறிவு இயக்கத்தைத் சேர்ந்தோர் மீது கோயில் சிலையைக் களவாடினார்கள் என்று வழக்குக் கொடுத்து விடலாம் என்பது - பண்ணையாளே பகுத்தறிவு இயக்க பரமசிவமும், பார்த்திபனும் திருடியதாக ஊரிலே கூறவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பூசாரி போகலிங்கத்திற்கும் அதே உத்தரவு - ஆனால், பொழுது விடிவதற்குள்ளே சிலையைத் தூக்கிப் போன பண்ணையாளே, உண்மையை ஊர் முழுவதும் சொல்லிவிட்டான்.
கனவிலே கண்ட காட்சியின் நினைப்பு முடிவதற்குள்ளே, ஊர் மக்களின் கூட்டம் வீட்டு எதிரில் கூடியிருப்பதைக் கண்டார் - கலங்கினார். அவருக்கு இப்பொழுது பயம் வந்ததற்குக் காரணம், கூடியிருப்பது மனித மந்தையல்ல, மக்கள் மன்றம் என்பது தெரியும்
தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கிடையாதாம்!
Friday, September 12, 2008
இந்துக்களுக்கு எதிரானவற்றை வன்முறை மூலமாகவே முறியடிப்பார்களாம்!
Sunday, September 7, 2008
"தமிழர் வரலாறு தமிழ்தான்"பேரா. பர்வீன் சுல்தானா
Saturday, September 6, 2008
இந்து மதவெறியர்களால் 50 ஆயிரம் கிறிஸ்துவர்கள் ஒரிசா காடுகளில் மறைந்து தவிக்கின்றனர்!
சிலர் மிகக் குறைந்த அள வில் உள்ள அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். 4 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வீடுகள் முழு மையாக இடித்து நொறுக்கப் பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தேவால யங்கள் எரிக்கப்பட்டுள்ளன. சிறிஸ்தவர்களைக் கொன்று குவித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்ற வலியுறுத்தி வரும் கொலைகாரக் கும்பல் களிடமிருந்து தப்பித்த கிறிஸ் தவர்கள் காடுகளுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து வாழ்கின்றனர். இந்த வன்முறை ஒரிசா மாநிலத்தில் மட்டுமல்லாது, தற்போது அண்டை மாநில மான மத்தியப் பிரதேச மாநி லத்திலும் பரவியுள்ளது.
இந்நிலையில் பொதுமக் கள் குழு ஒன்று திங்கள் கிழ மையன்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தது. திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான மகேஷ் பட் தலைமையிலான அந்தக் குழுவில் ஜாமியத் உலேமா தலைவர் மவுலானா மஹ்மூத் மதானி, தேசிய ஒருமைப்பாட் டுக் குழு உறுப்பினர் டாக்டர் ஜான் தயால், ஒரிசா ஆர்ச் பிஷப் ரேபேல் சீனால், டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் கான் செசாவ், அனைத்திந்தியக் கிறிஸ்தவக் குழுச் செயலாளர் மது சந்திரா, டில்லி மற்றும் மும்பை கத்தோலிக்கர் மற்றும் மஹாராஷ்டிர மாநில சிறுபான் மையினர் ஆணையத் தலைவர் டாக்டர் ஆப்ரகாம் மத்தாய் ஆகியோர் இடம் பெற்றிருந் தனர்.
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 355 இன் கீழ் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஹிந் துத்துவ வன்முறையாளர்களிட மிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கப் போதிய நடவ டிக்கை எடுக்க 355 ஆவது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக் குழு வினர் குடியரசுத் தலைவரைக் கோரினர். இம்மனுவில் ஒரிசா நிலைமை பற்றி விவரிக்கப் பட்டிருக்கிறது. விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த லட்சும ணானந்த சரசுவதி, மாவோ யிஸ்டுகளால் கொல்லப்பட்டி ருக்கலாம் என்று கூறப்பட் டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தாக் கப்பட்டதைப் போலவே இப் போதும் கந்தமால் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படவேண்டும் என்று குழு கூறியுள்ளது
Thursday, September 4, 2008
கூறுகெட்ட பிராமணா-உனை நீயே உயர்த்தி சொலல் ஏனடா?
தீண்டின குளத்து ஜலத்தை,
ஒருங்கே இறைத்து! அதில் ஜனிக்கும் ஊற்று நீரை எடுத்துப் பானஞ்செய்வது,
அதிக கஷ்டமானதால்! அது தீட்டல்லவென்றும். முகந்துவைத்த குடத்தின் ஜலத்தை அச்சூத்திரர் தீண்டின்.... அதைக் கொட்டிவிட்டு.
மீண்டும் சுலபத்தில் முகந்து கொள்ளக் கூடுமாதலால் அதைமட்டும் தீட்டெனவும், பிராமணர் கூறுகின்றனர். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
நியாயாதிபதிகளால்,
குற்றவாளிகளென்று தீர்மானிக்கப்பட்டு- சிறைச்சாலைகளில் அடைக்கப்படும், பிராமணர்களென்போர்!-
சிறைச்சாலைகளில் தாங்களுண்ட பாத்திரங்களை, நாடோறும் அலம்பி அவற்றிலேயே போஜனமுண்டு வருவதும், அவற்றை யெச்சாதியார்த் தீண்டினும் அவற்றிலேயே போஜன முண்பதும் தீட்டல்லவா?
சிறைச் சாலைகளினின்று விடுதலையான பின்- அப்பிராமணர் சமையல் செய்யும் பாத்திரங்களைப் பிராமணரல்லாதவர்கள் பார்க்கின்
பார்த்த மாத்திரத்தில் அவை தீட்டாயினவெனக் கூறி அவற்றை உடைத்தெறிய வேண்டுமாம்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
பிராமணர் தாம் கருதிய விடத்திற்குச் செல்ல,
இரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கட் வாங்கும்போது- பறையரென்றும், சக்கிலியரென்றும் பாராமல் ஒருவர் மீதொருவர் நெருக்கவும்,
ஒருவர் வேர்வை ஒருவர்மீது வடியவும்,
மிக்க வருத்தத்துடன் நின்று டிக்கட்டு வாங்கிக் கொண்டு- வண்டியின் மீது உட்கார்ந்தபின்...
அப்பிராமணர் தம்பக்கம் உட்கார்ந்துள்ள அப்பறையர் சக்கிலியரை நோக்கி அடா! ஈனஜாதிப்பயலே! மேலே விழாதடா, தொடாதடா-
எனத் தமது ஜாதியினை மேம்படுத்திக் கொள்வதை நாம் பன்முறையும் பார்த்து வருகிறோமே.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
கடவுளைச் சொப்பனத்தில்-
பார்ப்பவர்களாகிய பிராமணர்!
தாங்கள் இருப்புப்பாதை மார்க்கமாக,
நெடுங்தூரஞ் செல்ல நேரிட்டபோது-
புளியோரை ,ததியோதனம் முதலிய போஜன வகைகளுடன்...
வண்டியேறிச் செல்லுகையில் தம் அருகில் உட்கார்ந்திருக்கும் எச்சாதியாரையும் கவனியாமல்,
தாம் கொண்டு வந்த போஜனத்தை யுண்பதை மற்றெச் சாதியார் தீண்டியும் பார்த்துமிருந்தும்,
போஜனமுண்டு -
தம் மனைக்கு ..
தாமுண்ணும் போஜனத்தை காவலர்களும், பார்க்கலாகாதென்று-
பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
பிராமணர் தாம் ஸ்நானஞ்செய்தபின் ஸ்நானஞ் செய்யாதிருக்கும் தம்மினத்தவரே தம்மைத் தீண்டலாகாதென இதர ஜாதியாரிடத்தும் வாசகம் படித்து தம்மைத்தாமே புகழ்ந்து கொள்ளும் விவேகிகளாகிய பிராமணரில் திரளான பெயர் எவர்களிலும் இழிகுலத்தாராகிய விலைமாதர் மனைகளிலும் ஓட்டல்களிலும் மது மாமிசாதிகளுடன் போஜனமுண்டு வருகின்றனர்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
சமையல் செய்யும் மட் பாத்திரங்கள் மிகவும் அற்பக்கிரயமுடையன ஆதலால்,
அவை பிராமணரல்லாதவர்களால் பார்க்கப்படுவதினாலேயே-
தீட்டாயினவென பெருமை சொல்லிக் கொண்டு,
அவற்றை உடைத்தெறிய வேண்டுமென மொழிகின்றனர். மட்பாத்திரங்களிலும் விலை மிகுந்த செப்புப் பித்தளை பாத்திரங்களோ சூத்திரர் தீண்டத் தீட்டாயினும் அவற்றை உடைத்தெறியாது, புளிசாம்பராதிகளால் தேய்த்து, அலம்புவதே போதுமானதாம்.!!!
அவற்றிலும், விலையேறப் பெற்ற-
வெள்ளிப் பாத்திரங்கள் சூத்திரரால் தீண்டப்படினும் புளிசாம்பராதிகளால் தேய்க்கின் தேய்ந்து நஷ்டமாகுமெனக் கருதி ஜலத்தினால் அலம்புவதே போது மெனவும், அதிலும் விலைமிகுந்த பொன் இரத்தினபாணங்கள் ஜலம் படுமாயின் அவற்றின் பளபளப்புப் போய் விடுமென வெண்ணி அவற்றிற்குத் தீட்டில்லையெனவும்,
வீதிகளிலும், கடைகளிலும்,
உத்தியோக சாலைகளிலும், ஜலம்தேடி அலம்பி-
வாங்க அனுகூலிக்கா திருக்கும் ரூபா, அணா, பைசாக்களும் ஜலம் பட்டவுடன் பயன் படாதழிந்துபோகும் நோட்டுகளுக்கும் முத்திரை காகிதங்களுக்கும், தீட்டில்லையாம்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
பிராமணரல்லாதவர்கள் தீண்டின ஜலத்தையும் தீண்டோமென்று பெருமை படைத்துக் கொள்ளும் பிராமணரில்,
அநேகர் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், ஆடு மாடு கோழிகளின் மாமிசங்களால் செய்தனுப்பப்படும் பிஸ்கட் முதலிய தின்பண்டங்களையும்,
பிராந்தி, உஸ்கி முதலிய மயக்கத் திராவகங்களையும் உண்ணுவதே சுகிர்தமாம்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
துரைத்தன வைத்திய கலாசாலையில் வைத்திய சாஸ்திரங் கற்றுப் பரீட்சையில் தேர்ந்து வைத்திய உத்தியோகத்திலமர்ந்திருக்கும் பிராமண வைத்தியர்கள் மூலம், பவுத்திரம், நீரடைப்பு முதலிய வியாதிகளில் வருந்தும் பிராமணரல்லாதவர்கள்,
பறையர், சக்கிலியர் முதலியவரின்-
வியாதிகளைப் பரிசோதித்தும், கத்தியால் வகுத்தும், கழுவியும், அவிழ்தப் பிரயோகஞ் செய்தும், பரிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோமே.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
- டி.என். அநுமந்து உபாஸகர் திராவிடன் 17.8.1917
*********************************************************************
படித்த பார்ப்பன நண்பரே!
------------------------------------
"தன்மான இயக்கத்தின் தன்மை உணர பறையனாய் இருந்து பார்" கவிஞர் ஒருவர் சொன்னதை நான் சொன்னபோது பதை பதைத்துப் போனாயாம். நண்பர் சொன்னார்
எதிர்பார்க்கவில்லை - நான் பறையனாய் வாழ்வதாய் நினைத்துப்பார் என்றாலே நெருப்பிலே குளிப்பதுபோல் படபடப்பாய் நீ - என்று எதிர்பார்க்கவில்லை - நான்
அவா - அவா பூர்வ ஜென்மப் பலனாலே அந்த அந்தச் சாதியிலே பிறந்திருக்கா போன ஜென்மத்திலே புண்ணியம் செய்தவா நான் பூணூல் சாதியிலே பிறந்திருக்கிறேன் அட, என்னைப்போய் பறையனாய் இருந்துபார் என்று சொல்லி விட்டாரே கிசுகிசு செய்திபோல எனது செவிக்குள்ளும் வந்தது. இரத்தம் கொதிக்கிறது! இருப்பது 21-ஆம் நூற்றாண்டுதானே! பூணூல் சாதியிலே பிறந்தது பூர்வ ஜென்மப் பலனா? எவன் சொன்னான்? உனது உடம்பிலே நீ போட்டிருக்கும் பூணூல் எத்தனை உயிர்களை வதைத்தது. உடல் ரீதியாய் உள ரீதியாய் பூணூல் வரலாறு முழுக்க பொய்கள் - வன்மம் - வஞ்சனை உழைக்காமல் உண்டு கொழுக்க பூர்வ ஜென்மம் ஜோதிடம் கடவுள் அவதாரம் கத்திரிக்காய் எல்லாம்! ராபின் சர்மாவின் புத்தகத்தைப் படித்து ஆகா, என்னமாய் சொல்லியிருக்கின்றார் சிம்பதிக்கும் எம்பதிக்கும் வேறுபாட்டை சிலிர்த்து சிலிர்த்து சொல்வாயே! சிம்பதி என்றால் பரிதாப்படுவது எம்பதி என்றால் இன்னொருவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது.
அட - எம்பதி அடிப்படையில் கொஞ்ச நாள் பூணூலைக் கழட்டிப் போட்டுவிட்டு பறையனாய்த்தான் வாழ்ந்து பார்க்க கழனிக்கு வாயேன்! உழைக்கும் மக்கள் படும் பாட்டைப் பாரேன்! உண்ண உணவு இருக்கிறதா? பார்! உடுக்க உடை இருக்கிறதா? பார்! இருக்க இடம் இருக்கிறதா? பார்!
எதுவுமே இல்லாத இவனுக்கு பூணூல் கற்பித்த புடலங்காய் கடவுள்கள் மட்டும் எதற்கு என்று யோசித்துப் பார்? அப்போது தன்மான இயக்கத்தின் "தன்மை உணரப் பறையனாய் இருந்து பார்" என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும் பூணூல் என்பது பூர்வ ஜென்ம அரண் அல்ல. அசிங்கம் என்பதும் புரியும்.
Friday, August 29, 2008
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதக்கலவரத்தை தூண்ட பாரதிய ஜனதா சதி!
- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதக்கலவரத்தை தூண்ட பாரதிய ஜனதா சதிசெய்கிறது என்று ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் தி.மு.க அங்கம் வகிக்கிறது. புதிதாக அமையவுள்ள மாநில செயற்குழுவில் விவாதித்து காங்கிரஸ், தமிழக அரசில் தனது பங்கை கேட்கும் என்று தெரிவித்தார். அகில இந்திய செய்திதொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதக்கலவரத்தை தூண்ட பாரதிய ஜனதா சதிசெய்கிறது என்று குற்றம் சாட்டினார். குமரிஅனந்தன், காயத்திரி தேவி ஆகியோர் உடனிருந்தனர்.
Thursday, August 28, 2008
ஒரிஸ்ஸாவில் சங்பரிவார் வெறியாட்டம்
ஒரிஸ்ஸாவில் கிறித்தவர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் சக்திகள் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தை தமுமுக வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரிஸ்ஸாவில் உள்ள துமுடி பந்த்கா என்ற இடத்தில் சுவாமி லக்ஸ நந்த சரஸ்வதி உள்ளிட்ட ஐந்து பேர் படுகொலை செய்யப் பட்டது கண்டனத்திற்குரியது.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரிஸ்ஸா முழுவதும் வி.ஹெச்.பி தலைமையில் ஹிந்துத்வா சக்திகள் நடத்திவரும் வன்முறை வெறியாட்டம், நமக்கு குஜராத்தை நினைவூட்டுகிறது.
கடந்த 23.08.2008 தேதியிலிருந்தே தொடர்ச்சியாக வன்முறைகள் வெடித்துக் கொண்டிருப்பதும், அந்த வன்முறைகளால் பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் பாதிக்கப் பட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் கலவரத்தை அடக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் படுகொலைகளையும் நடத்தி வரும், மதவெறியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப் படவேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது
Saturday, August 23, 2008
அண்ணா தி.மு.கழகம் மதவாத கட்சி...? சோலை
திராவிடர் கழகம் - நிச்சயமாக மதவாதக் கட்சி அல்ல.
தி.மு.கழகம் - உறுதியாக மதவாதக் கட்சி அல்ல.
அண்ணா தி.மு.கழகம்? கேள்விக்குறி படமெடுத்து நிற்கிறது.
அமரர் எம்.ஜி.ஆர். இருந்தவரை அந்தக் கழகம் மதவாத சக்திகளுக்கு வேலி போட்டு நிறுத்தி இருந்தது. மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி உள்பட எத்தனையோ பி.ஜே.பி. தலைவர்கள் மரியாதை நிமித்தமாவது அவரைச் சந்திக்க ஆசைப்பட்டனர். ஆனால், கடைசி வரை கதவுகள் திறக்கப்படவில்லை.
செல்வி ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்றார். தான் தலைமை ஏற்பது திராவிட இயக்க வழி வந்த கழகம் என்பது அவருக்குத் தெரியாதா? தெரியும். ஆனால், தான் ஒரு இந்துத்துவா என்பதனை அவர் மறைத்ததில்லை. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து அதன் மீது ராமருக்கு ஆலயம் அமைப்போம் என்று அத்வானி படை திரட்டிச் சென்றார். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்பட எல்லா இந்து முன்னணி அமைப்புகளும் பங்குகொண்டன. இந்தத் திருப்பணியில் அண்ணா தி.மு.கழகமும் சிம்பாலிக்காகக் கலந்து கொண்டதற்காக விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் பாராட்டுத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. செல்வி ஜெயலலிதா கலந்துகொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி அவர் ஆணித்தரமாக வாதிட்டார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்வானியே அம்மாவின் வாதம் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கிவிட்டார். `இந்த அளவிற்கு எங்களால் கூட வாதாட முடியாது' என்றார்.
பாபர் மசூதியை இடித்துத்தான் அங்கே ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டுமா என்று பின்னர் விவாதம் எழுந்தது. அயோத்தியில் அங்கே ராமருக்கு ஆலயம் எழுப்பாமல் இத்தாலியிலா எழுப்ப முடியும்? என்று எரிசரம் கொடுத்தார் ஜெயலலிதா.
இந்துக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்க அவர் அச்சப்பட்டதேயில்லை. அந்த வகையில் பி.ஜே.பி. யே அவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வைத் தனிமைப்படுத்த அண்ணா தி.மு.க. ஓர் அணி அமைத்தது. அந்த அணியில் இடதுசாரி கட்சிகள் அங்கம் பெற்றன. இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் ஆதரவுக் கரம் நீட்டின.
சென்னை கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கு கொண்டு, பி.ஜே.பி.யோடு உறவு கொண்டதற்காக வருத்தம் தெரிவித்தார். இனி எந்தக் காலத்திலும் அந்தத் தவறைச் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி தந்தார். அன்றைய நிலையில் அவர் அப்படி வாக்குறுதி தந்தது காலத்தின் கட்டாயம். ஆனாலும் அவர் இந்துத்துவ ஒளி விளக்குதான்.
தேர்தலுக்குப் பின்னர் அவர் அரியணை ஏறினார். அவர் செய்த முதல் பணி என்ன? மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அன்னதானம் என்று ஆரம்பித்தார். தி.மு.க. தயவில் சட்டமன்றத்தை எட்டிப்பார்த்த பி.ஜே.பி. உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர்.
அடுத்து, அவர் செலுத்திய ஏவுகணை தோழமைக் கட்சிகளைத் திகைக்க வைத்தது. ஆனால் இந்துத்துவா உலகம் `அன்னையே வாழ்க' என எக்காளம் ஊதியது. ஆம். அவர் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தார். மையத்தில் ஆளும் போதும் மாநிலங்களில் ஆளும் போதும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவர பி.ஜே.பி.க்கு துணிச்சல் பிறந்ததில்லை. இந்தியாவிலேயே முதன்முதலாக இப்படிச் சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான். அதனைப் பார்த்துதான் நரேந்திர மோடியே அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தார்.
நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். இந்தியா முழுமையும் எழுந்த எதிர்ப்பையும் கண்டனங்களையும் கண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாயே ஆடிப்போய்விட்டார். அ.தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்று ஆங்கில ஏடுகள் எழுதின.
ஆனால், செல்வி ஜெயலலிதாவிற்கு ஆதரவாக நாகபுரியிலிருந்து ஒரு குரல் எழும்பியது. அ.தி.மு.க. அரசு மீது கை வைக்காதே என்று பகிரங்கமாக வாஜ்பாய்க்கே அந்தக் குரல் கட்டளையிட்டது. அந்தக் குரல் பி.ஜே.பி.களின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைமையின் ஆவேசக் குரல்.
எங்கோ வனாந்தரத்தில் பிறந்த மூங்கில் இங்கே புல்லாங்குழலாக கண்ணனின் கரங்களில் காட்சி அளிக்கவில்லையா? அதேபோல திராவிட இயக்க வழி வந்த அ.தி.மு.க. இன்றைக்கு இந்துத்துவா கோட்பாடுகளின் பூபாளம் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியது.
`படுகொலைகளுக்கு 48 மணி நேர சுதந்திரம் அளித்தவர்', `சைத்தான்களுக்கு சல்லடம் கட்டி விட்டவர்' என்றெல்லாம் நரேந்திர மோடிக்குப் பட்டங்கள் சூட்டினார்கள். ஆனால், அதற்கு அப்பால் அவர் இந்துத்துவாவின் போர்ப் படைத் தளபதி என்பதனை அவர்கள் மறந்துவிட்டனர். எனவேதான் மோடியின் முடிசூட்டு விழாவில் செல்வி ஜெயலலிதா பங்கு கொண்டார். பரிசளித்தார்.
அந்த விழாவில் பி.ஜே.பி. முதல்வர்கள் அல்லாமல் கலந்துகொண்ட ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று பெருமை பெற்றார்.
மோடியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதா என்று இடதுசாரி கட்சிகள் கோபக் குரல் எழுப்பின. ஆனால் அதனைப் பற்றியெல்லாம் அம்மா கவலை கொண்டதில்லை. கொண்ட கொள்கையில், ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் அவர் உறுதியாகப் பயணிப்பவர்.
சேதுசமுத்திரத் திட்டம் தமிழகத்தின் ஒரு நூற்றாண்டுக்காலக் கனவுத் திட்டம். அந்தத் திட்டத்தை வலியுறுத்தாத தமிழகத் தலைவர்களே இல்லை. ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் லட்சோப லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் ராமர் கட்டிய பாலத்திற்குச் சேதாரம் ஏற்படும் என்று குரல் கொடுத்து அந்தத் திட்டத்தையே தடுத்து நிறுத்தியிருப்பவர் ஜெயலலிதா. சேதுத் திட்டமா? ராமர் பாலமா? ராமர் பாலம் சேதப்பட்டால் கோடானு கோடி இந்துக்களின் இதயம் புண்பட்டு விடும் என்று வாதிட்டு வருபவர் செல்வி ஜெயலலிதா.
அவருடைய செயல்பாடுகளெல்லாம் எந்தத் தத்துவக் கோட்டிற்குள் அடங்கும் என்று ஆராய்வது வேலைவெட்டி இல்லாதவர்கள், பொழுதெல்லாம் கட்டாந்தரையில் புல் பறிப்பதற்குச் சமம். அவருடைய அறிவிப்புக்கள் கணீரென்று வரும். செயல்கள் மத்தாப்புச் சிரிப்போடு அட்டகாசமாக வரும். மதச் சார்பற்ற கோட்பாடுகளெல்லாம் அவரைப் பொறுத்தவரையில் நமத்துப் போன வெடிக்காத பட்டாசுகள்தான்.
`நான் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்' என்று சட்டமன்றத்தில் அவர் சங்கநாதம் செய்தார். எங்காவது மேடையில் இப்படிப் பிரகடனம் செய்தால் காற்றோடு போயிருக்கும். சரித்திரத்தில் பதிய வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்திலேயே பதிவு செய்து விட்டார்.
அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளர் ஷெகாவத்திற்குத்தான் அ.தி.மு.க. கழகம் வாக்களித்தது.
இப்படி ஊசலாட்டமின்றி இந்துத்துவ அடிச்சுவட்டில் அ.தி.மு.க. தெளிவாக நடைபோட்டுச் செல்கிறது. எனவே, அந்தக் கழகம் மதச்சார்பற்ற கட்சியா, மதவாதக் கட்சியா என்று மூளையைக் குழப்பிக் கொள்ளலாமா?
சீட்டுப் பங்கீடு அடிப்படையில் உடன்பாடு காணவிரும்புகிறவர்கள் அந்தக் கழகத்தை அணுகலாம். கூட்டணியும் தேர்தல் வரைதான். அதன் பின்னர் ஒவ்வொரு கட்சியும் தங்கள் வழியில் பயணம் செய்யலாம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஓர் அணி. தீர்ப்பிற்குப் பின்னர் வேறு அணி என்ற நிலையை அ.தி.மு.க எடுக்கும் என்பதை அடிக்கடி சிலர் சுட்டிக்காட்டுவதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்
நன்றி:குமுதம் ரிப்போர்டர் 24.08.08
அன்றே சொன்னோம் இவ்வாறெல்லாம் நடக்குமென்று:தமிழ் சங்கமி.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்கு வந்திருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக மீண்டும் தமிழர்களின் உரிமைக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களின் குடிநீர் திட்டமான அத்திட்டம் தமிழக எல்லைக்குள் தமிழ்நாட்டிற்கு உரிமையான தண்ணீரில் நிறைவேற்றப்படும் திட்டம் என்பதை கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
எனவே இத் திட்டத்தை தமிழகம் நிறைவேற்ற கர்நாடகாவிடம் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. இரு மாநில எல்லைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தலையிடும் உரிமை அம் மாநிலத்துக்கு எள்ளளவும் கிடையாது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவரது கட்சிக்கு விசுவாசத்தை காட்டிக் கொள்வதற்காக தமிழக பிரச்சினையில் இவ்வாறு தலையிடுவதற்கு முன் அவரது கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.
அதை விடுத்து பிரச்சினை எதுவுமில்லாத தமிழக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பிச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும், அதற்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் எடியூரப்பா மிரட்டல் விடுத்திருப்பது இந்திய நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கே விடுக்கும் சவாலாகும்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இவ்வாறு தமிழகத்திற்கு தொடர்ந்து இடையூரப்பாவாக இருந்து செயல்பட்டு வரும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Friday, August 15, 2008
எது சுதந்திரம்?
சுதந்திர கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!
கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்,
வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்...
நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகளை கண்ட பின்,
என் மனம் சிந்தித்தது....
கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய் ஒரு சிறுவன்னுக்கேனும் தந்தால்?
இந்தியா மானம் காப்பாற்றப்படுமே?
இப்படி நாட்டில் உள்ள கொடிகளை கழற்ற என் மனம் விரும்பினாலும்...
எனக்குச் சுதந்திரம் இல்லை-
நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!
(ஒரு காள் வெள்ளையன் ஆழ்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)
-----தபால்காரன்.
பட்டுக்கோட்டையாரின் சுதந்திர பாட்டு.
சொல்லவொண்ணா மகிழ்ச்சியிலே திளைப்பாள் என்று ,
தூங்காமல் இரவுபகல் பாடுபட்டதோழர்களே! தாய்மாரே! தந்தைமாரே!
சிறைவாழ்க்கை வேற்றாரின் கொடியசட்டம்,சித்ரவதை-
குண்டடிகள் யாவுந் தாங்கித் தேகமெலாந் தியாகவடுப் பெற்று நின்ற சிங்கங்காள்!
செக்கிழுத்த சித
